Thursday, 9 April 2020

வவுணதீவுவில் சட்டவி​ரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை - ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவுவில் பொலிஸ் பிரிவில் சட்டவி​ரோதமான முறையில் உற்பத்தி செய்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸார்  முற்றுகையிட்டதில் ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

(வவுணதீவு எஸ்.சதீஸ்) - 







மட்டக்களப்பு மாவட்டத்தின்   வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவி​ரோதமான முறையில் உற்பத்தி செய்த கசிப்பு உற்பத்தி நிலையங்களையும் விற்பனை நிலையங்களையும் வவுணதீவு பொலிஸார்  முற்றுகையிட்டதில் ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



வவுணதீவு ​​பொலிஸ் நிலைய ​பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாகவும் கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்  போன்றோரின் ஒத்துழைப்புக்கமைவாகவும் மேற்படி கசிப்பு நிலையம் முற்றுகையுடப்பட்டதுடன் அதனுடன் ​தொடர்புப்படோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா, கரையாக்கந்தீவு, காந்துநகர், காஞ்சிரங்குடா, பனையறுப்பான், பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் நேற்று இரவு, மற்றும் இன்று வியாழக்கிழமை  காலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இதில் கைது செய்யப்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு ​பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களையும், கசிப்பு போத்தல், கொள்ளகலன்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை பொலிஸாருடன் இணைந்து மண்முனை ​மேற்கு பிரதேச உதவி பிரதேச ​செயலாளர் சுபா சதாகரன் பார்வையிட்டதுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத் ​​​தெரிவித்தார்.

வவுணதீவு ​பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது இதுவரை 17 வடிசாராயம் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி இன்று தெரிவித்தார்.





No comments:

Post a Comment